Monday, January 9, 2012


நிறைய அதிர்ச்சிகள்
கிடைக்கின்றன...
சாதிசந்தையில் ஒரு கவிஞன்
தன் கவிதைகளை எதையெடுத்தாலும்
என்று கூவி விற்கிறான்...
இலக்கியக்கூட்டங்களில் சாதிய நரிகளின்
ஊளைகள் காற்றைக் கிழிக்கின்றன...
விளைமாதர்களைவிடக் கேவலமாய்
சாதியைப் புணர்கிறார்கள்...
எல்லாப் போராட்டங்களிலும்
வென்றெடுப்போம் என்கிறார்கள்
பன்றிகளின் தொங்கும் வயிறுகளைப்போல
வயிற்றை நிரப்பியபடி கூடுவோமென்று
புணர்ச்சிக்களையும் நாய்களைப்போல
எச்சில்வழியும் நாக்குகளைப் புரட்டியபடி...